முகப்பு
இந்தியா

காற்று மாசு அதிகரிப்பு: தில்லியில் தொடக்கக்கல்வி மாணவர்களுக்கு இணையவழியில் மட்டுமே வகுப்புகள்!

ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைய வழியில் கல்வி...

Updated On : 15 டிசம்பர், 2025 at 4:27 PM
தில்லியில் காற்று மாசு
பகிர்:

தில்லியில் காற்று மாசு அதிகரித்திருப்பதன் விளைவாக, ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களை பள்ளிகளுக்கு அழைக்க வேண்டாமெனவும், அவர்களுக்கு இணையவழியில் பாடம் நடத்தவும் தில்லி அரசு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை நர்சரி முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் வீடுகளிலிருந்தே பாடம் பயில அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காற்று மாசு அளவு கடுமையாக உயா்ந்ததால், தில்லி என்.சி.ஆா். பகுதியில் கிரேப் நிலை-4 கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் (சி.ஏ.க்யூ.எம்.) அமல்படுத்தியது. இதனால் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை கலப்பு முறையில் (ஹைபிரிட்) முறைக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு முழுமையாக ஆன்லைன் முறையில் கல்வி கற்பிக்க அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

summary

Due to the increased AQI (Air Quality Index) in Delhi, offline classes for students from nursery to class 5 have been suspended.

முழு கட்டுரையைப் படிக்க →