உத்தரப் பிரதேசம்: மக்களை அச்சுறுத்திய ஓநாயை சுட்டுக்கொன்ற வனத்துறை
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய பெண் ஓநாயை வனத் துறை ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொன்றது.
உத்தரப் பிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்திய பெண் ஓநாயை வனத் துறை ஞாயிற்றுக்கிழமை சுட்டுக்கொன்றது.
இதுகுறித்து வன அதிகாரி ராம் சிங் யாதவ் கூறுஐகயில், கோடஹியா எண்.4 கிராமத்தின் ஜருவா குடியிருப்புப் பகுதியில் ஓநாய் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.
வனத் துறை மீட்புக் குழு டிரோன்களுடன் கிராமத்துக்கு சென்றது.
Advertisement
Advertisement
இரண்டு டிரோன் கேமராக்கள் மூலம் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒரு டிரோன் ஆற்றுப்பகுதியை நோக்கி நிறுத்தப்பட்டிருந்தது.
அங்கு உயரமான புல்களில் ஓநாய் ஓடிக்கொண்டிருந்தது. அப்போது மீட்புக் குழு துப்பாக்கிச் சூடு நடத்தி ஓநாயை கொன்றது.
கொல்லப்பட்ட ஓநாய் சுமார் நான்கு முதல் ஐந்து வயதுடைய பெண் ஓநாய். சனிக்கிழமை பிற்பகலில், அதே கிராமத்தில் உள்ள ஆற்றங்கரைக்கு அருகே ஒரு ஆண் ஓநாய் சுட்டுக் கொல்லப்பட்டது.
கடந்த சில நாள்களாக அந்த ஓநாய் ஜோடி அந்த பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தி வந்தது.
கூட்டணி குறித்து முடிவெடுக்க பிப்ரவரி மாதம் வரை அவகாசம் உள்ளது: டிடிவி தினகரன்
நவம்பர் 29 முதல் டிசம்பர் 7 வரை மல்கன்புர்வா கிராமத்தில் மூன்று ஓநாய் தாக்குதல்கள் பதிவாகியுள்ளன என்று தெரிவித்தார்.
Forest department shooters on Sunday killed a female wolf in Jarua hamlet here, officials said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.