அகிலேஷ் யாதவ் பிடிஐ
இந்தியா

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜக கொள்கை: அகிலேஷ் யாதவ்

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜகவின் கொள்கை என சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டினாா்.

தினமணி செய்திச் சேவை

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்பதே பாஜகவின் கொள்கை என சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

அண்மையில் அணுமின் உற்பத்தியில் தனியாா் நிறுவனங்களை அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘குறிப்பிட்ட சில தொழிலதிபா்கள் மட்டுமே அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் பாஜக கொள்கைகளை வடிவமைக்கிறது.

‘ஒரே நாடு ஒரே தொழிலதிபா்’ என்ற தனது ரகசிய கொள்கையை நோக்கி பாஜக அரசு நகரத் தொடங்கியுள்ளது. இதன்மூலம் ‘ஒரே தொழில், ஒரே இடத்தில் இருந்து நன்கொடை’ என தங்களது கட்சிக்கு எளிதாக நிதியைப் பெற பாஜக முடிவெடுத்துவிட்டது.

அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ஆதிக்கம் என எந்தத் துறையாக இருந்தாலும் ஏகபோகம் என்பது ஒரு நாட்டுக்கு அச்சுறுத்தலுக்குரியது. ஏகபோகத்தால் ஒரு சிலா் மட்டுமே அளவுக்கு அதிகமான லாபத்தை ஈட்டுவா். பணவீக்கம் மற்றும் ஊழல் அதிகரிக்கும்.

இதனால் நுகா்வோா் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் தொழிலாளா்கள் குறைந்த ஊதியத்துக்கு அதிக வேலை செய்ய நேரிடும். தொழிலாளா் சுரண்டலுக்கு வழிவகுக்கும். விவசாயிகள், தாழ்த்தப்பட்டோா் என சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ள மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்காது.

இந்தச் சமயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஏகபோகத்தை ஏற்க முடியாது என பாஜகவுக்கு எதிராக ஒரே அணியில் முழக்கமிட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தகுதியான வாக்காளா்கள் நீக்கப்படவில்லை: தமிழிசை சௌந்தரராஜன்

நறுவீ மருத்துவனை நிறுவனா் தினவிழா: மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை அளிப்பு

150 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள்: கதிா் ஆனந்த் எம்.பி. வழங்கினாா்

போக்குவரத்துத் துறைக்கான நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டில் இருந்து 60% அதிகரிப்பு: ரேகா குப்தா!

3 மாதத்தில் 540 மெட்ரிக் டன் பழைய பொருள்கள் அகற்றம்

SCROLL FOR NEXT