2025இல் - ‘பட்டம் வேண்டாம்; திறன் போதும்!’ மாற்றி யோசிக்கத் தொடங்கிய ஜென் ஸீ தலைமுறை?
வழக்கமான வேலை தேடும் நடைமுறையிலிருந்து மாறுபடும் ஜென் ஸீ தலைமுறை பற்றி...
மாற்றி யோசிக்கத் தொடங்கிய ஜென் ஸீ தலைமுறை :
2025 இல், ஜென் ஸீ தலைமுறையினர் வழக்கமான வேலை தேடும் நடைமுறையிலிருந்து மாறுபட்டு நிற்பதாக கள நிலவரங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்ப வளர்ச்சியால், எண்ட்ரி லெவல் பணியிடங்கள் என்றழைக்கப்படும் விளிம்புநிலை தொழில்நுட்ப பணியிடங்களுக்கான தேவை கணிசமாகக் குறைந்துவிட்டதாம். கடந்த 2024முதல், இளநிலை பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு கணிசமாகக் குறைக்கப்பட்டிருப்பதை உலகளாவிய தரவுகள் வெளிக்காட்டுகின்றன.
Advertisement
Advertisement
நிறுவனங்கள் பலவும் சீனியர் பணியிடங்களில் பணியாற்றும் பணியாட்களை வைத்துக்கொண்டு ஜூனியர் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பதை நிறுத்திக் கொண்டுள்ளதாம். மேற்கண்ட ஜூனியர்நிலை பணிகள் ஏஐ தொழில்நுட்ப உதவியால் கையாளப்படுவதால் அவற்றுக்கான தேவை குறைந்துவிட்டது இதற்கு முக்கிய காரணமாம்.
இதன் காரணமாக, வேலை சந்தையில் பட்டதாரிகள் முட்டுச்சந்தில் நிற்பதை உணருகிறார்களாம்.
இந்த மாற்றத்தை உற்று கவனிக்கும் இளம் தலைமுறையைச் சார்ந்த ஜென் ஸீ இளையோர், வழக்கமான வேலை தேடும் பாணியை விட்டு விலகி, மாற்றி யோசிக்கத் தொடங்கிவிட்டனராம். இளநிலை தொழில்நுட்ப பணிகள், நிதி, நிர்வாகம் மற்றும் அவற்றைச் சார்ந்த வாடிக்கையாளர் சேவை உள்பட துணைப் பணியிடங்கள் ஆகியவற்றிலிருந்து ஜென் ஸீ இளையோர் விலகுவதாக தெரியவந்துள்ளது.
முதலில், படித்துப் பட்டம் பெற்று பின் வேலையில் சேருவதை விடுத்து, பணியிடங்களுக்கு ஏற்ற திறனை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனராம்..!
2025: Gen Z moving away from traditional career paths - the old career map no longer works for them.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.