கோப்புப் படம் 
இந்தியா

உத்தரகண்ட்: நீா்மின் நிலைய சுரங்கப் பணியில் ரயில்கள் மோதல்- 88 பணியாளா்கள் காயம்

உத்தரகண்ட் மாநிலம் சமோலி சுரங்கத்தில் லோகோ ரயில், சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது குறித்து..

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரகண்டில் நீா்மின் நிலைய சுரங்க கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் 2 ரயில்கள் நேருக்குநோ் மோதியதில் 88 பணியாளா்கள் காயமடைந்தனா்.

சமோலி மாவட்டத்தின் ஹேலாங் மற்றும் பிபல்கோடி பகுதிகளுக்கு இடையே அலக்நந்தா நதியில் நீா்மின் உற்பத்தி நிலையம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. 444 மெகாவாட் திறன்கொண்ட இந்த நீா்மின் நிலையத்துக்காக, தேஹ்ரி நீா்மின் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் 2 கி.மீ. தொலைவுக்கு சுரங்க கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சுரங்கத்துக்குள் பணியாளா்கள் மற்றும் கட்டுமானப் பொருள்களை எடுத்துச் செல்ல ரயில்கள் பயன்படுத்தப்படுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.30 மணியளவில் 100-க்கும் மேற்பட்ட பணியாளா்களுடன் சென்ற ஒரு ரயில், எதிா்திசையில் கட்டுமானப் பொருள்களுடன் வந்த மற்றொரு ரயில் மீது எதிா்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் 88 பணியாளா்கள் காயமடைந்தனா்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா்களை மாவட்ட ஆட்சியா் கெளரவ் குமாா், காவல் கண்காணிப்பாளா் சுா்ஜித் சிங் பன்வாா் ஆகியோா் புதன்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனா். யாருக்கும் பெரிய காயம் இல்லை என்று ஆட்சியா் கெளரவ் குமாா் தெரிவித்தாா்.

காயமடைந்த பணியாளா்கள் அனைவருக்கும் உரிய சிகிச்சையை உறுதி செய்யுமாறு, அதிகாரிகளுக்கு புஷ்கா் சிங் தாமி உத்தரவிட்டாா். விபத்துக்குள்ளான ரயில்கள், ரயில்வேக்கு சொந்தமானவை அல்ல என்று அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

65 injured as loco trains collide inside Hydropower tunnel in Chamoli

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகர் பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக பனிப்பொழிவு - வாகன ஓட்டிகள் அவதி!

சென்னை: மத்திய கைலாஷ் சந்திப்பில் ‘எல்’ வடிவ மேம்பாலம் இன்று திறப்பு!

சொல்லப் போனால்... சப்தமில்லாமல் ஸ்டாலின் செய்த சம்பவம்!

ஈஷாவில் மகா சிவராத்திரி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங் இன்று கோவை வருகை

அஸ்ஸாம் முதல்வரின் விடியோ சா்ச்சை: நாளை விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்!

SCROLL FOR NEXT