ENS
இந்தியா

விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? - ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? என சிரோமணி அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

DIN

மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? என சிரோமணி அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை(பிப். 1) தாக்கல் செய்து உரையாற்றினார். பல்வேறு துறைகளுக்கு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

பிகார் மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து அந்த மாநிலத்திற்கு அதிக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள் எங்கே? என சிரோமணி அகாலிதள எம்.பி. ஹர்சிம்ரத் கெளர் பாதல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் மாநிலங்களின் பெயர்கள் மட்டும் பட்ஜெட்டில் உள்ளன. குறிப்பாக பட்ஜெட்டில் இருந்தது பிகார், பிகார், பிகார்... மட்டுமே.

பஞ்சாப் பற்றி பட்ஜெட்டில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்திற்காக விவசாயிகள் கடந்த 4 ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக அவர்கள் என்ன அறிவித்தார்கள்? இது விவசாயிகளுக்கு எதிரான பட்ஜெட். தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளின் குரல் கேட்கப்படவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் முதல்வராக முதல் முறை பதவியேற்ற நிதீஷ் குமார் ஒரே வாரத்தில் பதவியிழந்தது ஏன்?

இது என்னுடைய மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும்: ஜி.வி.பிரகாஷ்

குப்பை வண்டியில் உணவு விநியோகம்: ஊழியர்கள் அதிர்ச்சி!

பிகார் முதல்வராக பதவியேற்றார் நிதீஷ் குமார்!

சவரனுக்கு ரூ.800 குறைந்த தங்கம் விலை!

SCROLL FOR NEXT