ANI
இந்தியா

நாடு முழுவதும் சுற்றுலாவை ஊக்குவிக்க வெளியான அறிவிப்புகள்!

நாடு முழுவதும் சுற்றுலாவை ஊக்குவிக்க பட்ஜெட்டில் வெளியான அறிவிப்புகள்

இணையதளச் செய்திப் பிரிவு

பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் உள்பட நாடு முழுவதும் சுற்றுலாவை ஊக்குவிக்க பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார்.

பழவேற்காட்டில் பறவைகளை கண்காணிக்க 3 புதிய கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், உலகத் தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.

நாடு முழுவதும் 15 தொல்லியல் தளங்கள் சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படும்.

ஐஐஎம் உதவியோடு நாடு முழுவதும் உள்ள 20 சுற்றுலாத் தலங்களில் 10 ஆயிரம் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

மலையேற்றம் ஊக்குவிப்பு

தமிழகத்தின் பொதிகை மலை, இமாச்சல், உத்தரகண்ட், ஜம்முவில் மலையேற்றத்தை ஊக்குவிக்க திட்டம் உருவாக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

புற்றுநோய் 17 மருந்துகளுக்கு சுங்க வரி விலக்கு! 7 நோய் மருந்துகளுக்கு இறக்குமதி வரி குறைப்பு!

பட்ஜெட் 2026: மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்

யு19 உலகக் கோப்பை: ஆசிய கோப்பையின் தோல்விக்கு, பாகிஸ்தானைப் பழிதீர்க்குமா இந்தியா?

மத்திய பட்ஜெட்: 83 நிமிடங்கள் உரையாற்றிய நிர்மலா சீதாராமன்!

SCROLL FOR NEXT