வெடிகுண்டு மிரட்டல்  கோப்புப்படம்
இந்தியா

ம.பி.யில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

மத்தியப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

மத்தியப் பிரதேசத்தில் தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் கந்த்வா சாலை மற்றும் ராவ் பகுதிகளில் உள்ள 2 தனியார் பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் இன்று(செவ்வாய்க்கிழமை) காலை வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துள்ளன.

இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவரும் உடனே வெளியேற்றப்பட்டனர்.

தொடர்ந்து, காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்புப் படையினர் இரு பள்ளிகளிலும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுவரை எந்த வெடிபொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் இது புரளியாக இருக்கலாம் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். எனினும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

வெடிகுண்டு மிரட்டல் வந்த மின்னஞ்சலில் சில தகவல்கள் தமிழ் மொழியிலும் எழுதப்பட்டுள்ளதாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி பண்டிகை: கடைகளில் தொழிலாளா் உதவி ஆணையா் ஆய்வு

மாசற்ற தீபாவளி: பிரசார வாகனம் தொடங்கிவைப்பு

அசாதாரண சூழல்களில் மட்டுமே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

அரசியல் ரீதியாக வாய்ப்பு குறைந்த சமூகங்கள் மீது தனிக்கவனம் அவசியம்

மொபெட் மீது திருமாவளவன் காா் மோதிய விவகாரம்: இரு தரப்பினா் மீதும் வழக்கு

SCROLL FOR NEXT