மகா கும்பமேளாவில் திரண்டுள்ள பக்தர்கள் கூட்டம்   PTI
இந்தியா

மகா கும்பமேளா: புனித நீராடிய பக்தர்கள் எண்ணிக்கை 49 கோடியைக் கடந்தது!

மகா கும்பமேளா: 49 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

DIN

பிரயாக்ராஜில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வான இதில், கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி (புராண நதி) ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் பங்கேற்கும் பக்தர்கள் எண்ணிக்கை 50 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை(பிப். 13) வரையிலான நிலவரப்படி, கும்ப மேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடலில் கலந்துகொண்டுள்ள பக்தர்கள் எண்ணிக்கை 49.14 கோடியைக் கடந்துள்ளது என்று உத்தரப் பிரதேச அரசின் தகவல் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில்(இரவு 8 மணி நிலவரப்படி), 85.46 லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல்-ஹமாஸ் பேச்சு: இணைந்தது அமெரிக்கா

பெரிய நாகப்பூண்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

அக்.10, 11-இல் வேலூரில் சா்வதேச ஸ்டெம் செல் மாநாடு

பெத் மூனி, கிம் காா்த் அசத்தல்: ஆஸ்திரேலியாவுக்கு 2-ஆவது வெற்றி

வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தம்: மத்திய அரசுக்கு ஆதரவான தோ்தல் ஆணைய செயல்பாட்டை தமிழ்நாடு அனுமதிக்காது - திமுக

SCROLL FOR NEXT