FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ரமலான் மாதம்: ஆந்திரத்திலும் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு!

ஆந்திரத்திலும் முஸ்லிம்களுக்கு அலுவலக நேரம் குறைப்பு தொடர்பாக...

Updated On : 18 பிப்ரவரி 2025, 8:02 pm IST
ஆந்திரம் மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு. - கோப்புப்படம்
பகிர்:

ரமலான் மாதத்தையொட்டி, அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அலுவலக நேரத்தை குறைத்து ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது.

ரமலான் பண்டிகை இந்தாண்டு மார்ச் மாதம் 31-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. முன்னதாக, மார்ச் 2 முதல் 30 வரை இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து மாலையில் தொழுகை செய்வார்கள்.

இந்த நிலையில், ஆசிரியர்கள், ஒப்பந்த பணியாளர்கள், கிராம / வார்டு செயலாளர்கள் பணிபுரியும் அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் வரும் மார்ச் 2 முதல் மார்ச் 30 வரையிலான ரமலான் காலத்தில் அவர்கள் கடைப்பிடிக்கும் சடங்குகள் தொடர்பான வழிகாட்டுதலின் படி, தங்களது அலுவலக நேரம் முடிவுதற்கு 1 மணி நேரம் முன்னரே செல்லலாம் என்று ஆந்திர மாநில தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதையும் படிக்க: கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்டால் கத்தக்கூடாது! தப்புவது எப்படி?

ரமலான் மாதத்தில் நோன்பு முடித்து தொழுகை செய்வதற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அரசுத் துறைகளில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அலுவலக நேரத்தை குறைத்து மாலை 4 மணிக்கு வீட்டுக்குச் செல்ல அனுமதி வழங்கி தெலங்கானா அரசு உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments