திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நுபுர் சர்மா!
பாஜகவின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா மகா கும்பமேளாவில் புனித நீராடினார்..
உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பாஜகவின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா புனித நீராடினார்.
இஸ்லாமியர்களின் ஆன்மிக குருவான நபிகள் நாயகம் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நுபுர் சர்மா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகள் பரவலாக கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியாவின் பல பகுதிகளில் வன்முறை போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து, கடந்த 2022-இல் பாஜகவின் செய்தித் தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நுபுர் சர்மா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், பாஜகவின் முன்னாள் நிர்வாகியான நுபர் சர்மா திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
Advertisement
Advertisement
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி மகா சிவராத்திரியான நாளை நிறைவடைகிறது. திரிவேணி சங்கமத்தில் முக்கிய அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், நடிகை, நடிகர்கள் வரை அனைவரும் புனித நீராடினர்.
45 நாள்கள் நடைபெற்ற மகா கும்பமேளா நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைய உள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதிலுமிருந்து இதுவரை 62 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடிச் சென்றதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.