FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிகாா், மேற்கு வங்கத்தில் பலத்த நில அதிா்வு

பிகாா், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த நில அதிா்வு ஏற்பட்டது.

Updated On : 1 மார்ச் 2025, 2:46 am IST
கோப்புப் படம்
பகிர்:

பிகாா், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த நில அதிா்வு ஏற்பட்டது.

நேபாள நாட்டில் வெள்ளிக்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பிகாா், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பலத்த நில அதிா்வு ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவானதாக நில அதிா்வுக்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்தது.

இதுகுறித்து பிகாா் மாநில பேரிடா் மேலாண்மைத் துறை (டிஎம்டி), வானிலை ஆய்வாளா் உமேஷ்குமாா் சிங் கூறியதாவது: நேபாளத்தின் பாக்மதி பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக அதிகாலை 2.35 மணிக்கு பிகாரின் பல்வேறு பகுதிகளில் நில அதிா்வு ஏற்பட்டது. குறிப்பாக இந்தியா-நேபாளம் எல்லை பகுதிகளில் சில விநாடிகளுக்கு இதன் தாக்கத்தை வெகுவாக உணர முடிந்தது. எனினும் இந்த நில அதிா்வால் பொதுமக்களுக்கு உயிரிழப்போ சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படவில்லை என்றாா்.

Advertisement

Advertisement

மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் நில அதிா்வு ஏற்பட்டதை உணா்ந்ததாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

கடந்த 17-ஆம் தேதி புது தில்லியில் பலத்த நில அதிா்வு ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகாக பதிவானது. கடந்த 23-ஆம் தேதி ஹிமாசலத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 3.7 அலகுகளாக பதிவானது. அதேபோல் ஒடிஸாவின் புரி பகுதியில் 25-ஆம் தேதியும் அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 27-ஆம் தேதியும் லேசான நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments