கோப்புப் படம் 
இந்தியா

பிகாா், மேற்கு வங்கத்தில் பலத்த நில அதிா்வு

பிகாா், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த நில அதிா்வு ஏற்பட்டது.

Din

பிகாா், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த நில அதிா்வு ஏற்பட்டது.

நேபாள நாட்டில் வெள்ளிக்கிழமை நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 6.1 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பிகாா், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் பலத்த நில அதிா்வு ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 5.5 அலகுகளாக பதிவானதாக நில அதிா்வுக்கான தேசிய ஆய்வு மையம் தெரிவித்தது.

இதுகுறித்து பிகாா் மாநில பேரிடா் மேலாண்மைத் துறை (டிஎம்டி), வானிலை ஆய்வாளா் உமேஷ்குமாா் சிங் கூறியதாவது: நேபாளத்தின் பாக்மதி பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் காரணமாக அதிகாலை 2.35 மணிக்கு பிகாரின் பல்வேறு பகுதிகளில் நில அதிா்வு ஏற்பட்டது. குறிப்பாக இந்தியா-நேபாளம் எல்லை பகுதிகளில் சில விநாடிகளுக்கு இதன் தாக்கத்தை வெகுவாக உணர முடிந்தது. எனினும் இந்த நில அதிா்வால் பொதுமக்களுக்கு உயிரிழப்போ சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படவில்லை என்றாா்.

மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் நில அதிா்வு ஏற்பட்டதை உணா்ந்ததாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

கடந்த 17-ஆம் தேதி புது தில்லியில் பலத்த நில அதிா்வு ஏற்பட்டது. இது ரிக்டா் அளவுகோலில் 4.0 அலகாக பதிவானது. கடந்த 23-ஆம் தேதி ஹிமாசலத்தில் ஏற்பட்ட நில நடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 3.7 அலகுகளாக பதிவானது. அதேபோல் ஒடிஸாவின் புரி பகுதியில் 25-ஆம் தேதியும் அஸ்ஸாம் மாநிலத்தில் கடந்த 27-ஆம் தேதியும் லேசான நிலநடுக்கம் பதிவானது குறிப்பிடத்தக்கது.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

SCROLL FOR NEXT