ஒடிசா ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி பதவியேற்பு!
ஒடிசாவின் 27-வது ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி பதவியேற்பு பற்றி..
ஒடிசாவின் 27-வது ஆளுநராக ஹரிபாபு கம்பம்பட்டி வெள்ளிக்கிழமை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், முதல்வர் மோகன் சரண் மாஜி, எதிர்க்கட்சித் தலைவர் நவீன் பட்நாயக், மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பாஜக தலைவர்கள் மற்றும் பிற முக்கியஸ்தர்கள் முன்னிலையில் ஒரிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சக்ரதாரி சரண் சிங் கம்பம்பட்டிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதற்கு முன்னதாக ஆளுநராக இருந்த ரகுபர் தாஸ் பதவியை ராஜிநாமா செய்ததையடுத்து ஹரிபாபு கம்பம்பட்டி இன்று பதவியேற்றார்.
Advertisement
ஹரிபாபு கம்பம்பட்டி ஆளுநராக பதவியேற்க வியாழக்கிழமை மதியம் ஒடிசா வந்தார். விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் புரியில் உள்ள ஜெகந்நாதர் கோயிலுக்குச் சென்று, மாநிலம் மற்றும் மக்களின் நலனுக்காக வழிபாடு மேற்கொண்டார்.
மிசோரம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநராக இருந்த கம்பம்பட்டி, ஒடிசாவின் ஆளுநராக கடந்த ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவால் நியமிக்கப்பட்டார்.