ANI
இந்தியா

தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரசாந்த் கிஷோர்! உடல்நிலை மோசமடைந்துள்ளது: ஜன் சுராஜ் கட்சி

பிகாரில் உண்ணாவிரதம்: பிரசாந்த் கிஷோர் உடல்நிலை மோசமடைந்துள்ளது! ஜன் சுராஜ் கட்சி

DIN

பாட்னா: பிகாரில் அரசுப் பணி முதல்நிலை தோ்வு வினாத்தாள் கசிந்த சா்ச்சையால், அம்மாநிலத்தில் மொத்தம் 5 லட்சம் போ் எழுதிய முதல்நிலைத் தோ்வை ரத்து செய்யக் கோரி போராட்டங்கள் நீடித்துவருகின்றன.

‘ஜன் சுராஜ்’ கட்சி நிறுவனர் பிரசாந்த் கிஷோா், பாட்னாவின் காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஜன. 2-ஆம் தேதி முதல் அவர் மேற்கொண்டுள்ள சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று(ஜன. 8) வரை தொடர்கிறது.

இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக அவர் சார்ந்துள்ள ஜன் சுராஜ் கட்சி இன்று தெரிவித்துள்ளது.

உண்ணாவிரதம் கடைப்பிடித்து வரும் பிரசாந்த் கிஷோர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவர்கள், அவர் உணவுவோ வேறு ஏதேனும் நீராகாரமோ உட்கொள்ளவில்லையெனில் அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளதாக ஜன் சுராஜ் கட்சித் தலைவர் மனோஜ் பார்தி தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விடியற்காலையில் நிலவும் கடும் பனி மூட்டம்! வேலூரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பழனி திருஆவினன்குடி கோயிலில் குடமுழுக்கு கோலாகலம்!

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீ: 40 வீடுகள் எரிந்து நாசம், தீயணைப்பு வீரரும் பலி

வெகு விமர்சையாக நடைபெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் மகா கும்பாபிஷேக விழா

சென்னை விமான நிலையத்தில் இன்று 71 இண்டிகோ விமானங்கள் ரத்து

SCROLL FOR NEXT