முகப்பு
இந்தியா

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதிமீறல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி மீது நடவடிக்கை?

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி மீறியதாக பிரசாந்த் கிஷோர் குற்றச்சாட்டு

Updated On : 5 பிப்ரவரி, 2026 at 11:20 AM
பிரசாந்த் கிஷோர் - கோப்புப் படம்
பகிர்:

பிகார் தேர்தலில் அரசியலமைப்பு விதியை தேசிய ஜனநாயகக் கூட்டணி மீறியதாக உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் மேல்முறையீடு செய்துள்ளார்.

பிகாரில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர், பெண்களுக்கான நிதியுதவியை மாநில அரசு அறிவித்ததாகவும், அரசியலமைப்பு விதியை பிகார் அரசு மீறி விட்டதாகவும் பிரசாந்த் கிஷோர் குற்றம் சாட்டியுள்ளார்.

மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும், பெண்களுக்கு முதல்வர் மகிளா ரோஜ்கர் யோஜனாவின்கீழ் தலா ரூ. 10,000 வழங்கியதன் மூலம் அரசு, சட்டத்தை மீறியதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்

அரசியலமைப்பின் 324-வது பிரிவு (தேர்தல்களை நடத்துவதற்கான கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடு) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-வது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடுமாறு உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் கிஷோர் மேல் முறையீடு செய்துள்ளார்.

மேலும், இந்த வழக்கானது வெள்ளிக்கிழமையில் தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் ஜாய்மல்யா பாக்சி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

பிகாரில் 2025 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சியினர் பெரும்பாலான வேட்பாளர்கள் டெபாசிட்டை இழந்தனர். ஆனால், 243 தொகுதிகளில் 202 தொகுதிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றியது.

summary

Jan Suraaj Party moves Supreme Court alleging cash inducements in Bihar polls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.