முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் சுட்டுக் கொலை!

நக்சல்கள் 12 பேரைச் சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர்.

Updated On : 16 ஜனவரி 2025, 8:08 pm IST
நக்சல்கள் சுட்டுக் கொலை (கோப்புப் படம்)
பகிர்:

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அதில் நக்சல்கள் இருந்த வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்குமிடையே இன்று காலை 9 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்தத் துப்பாக்கிச்சூடு நடவடிக்கையில் மூன்று மாவட்டங்களின் ரிசர்வ் காவல் படை, ஐந்து பட்டாலியன் சிஆர்பிஎஃப் வீரர்கள், கோப்ரா வீரர்கள் படை, மத்திய ரிசர்வ் காவல் படையின் 229-வது பட்டாலியன் பிரிவினர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

இதில், 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நக்சல்கள் பொருத்திய வெடிகுண்டுகள் வெடித்து 2 மத்திய ரிசர்வ் காவல் படையினர் படுகாயமடைந்தனர்.

கடந்த ஜனவரி 12 அன்று இதே மாவட்டத்தின் மாதெத் பகுதியில் 2 பெண்கள் உள்பட 5 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

இது பிஜப்பூர் பகுதியில் இந்த மாதம் நடைபெற்ற இரண்டாவது பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவமாகும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments