நக்சல்கள் சுட்டுக் கொலை (கோப்புப் படம்) 
இந்தியா

சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் சுட்டுக் கொலை!

நக்சல்கள் 12 பேரைச் சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படையினர்.

DIN

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூர் மாவட்டத்தின் தெற்குப் பகுதியில் இன்று பாதுகாப்புப் படையினர் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அதில் நக்சல்கள் இருந்த வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்குமிடையே இன்று காலை 9 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது.

இந்தத் துப்பாக்கிச்சூடு நடவடிக்கையில் மூன்று மாவட்டங்களின் ரிசர்வ் காவல் படை, ஐந்து பட்டாலியன் சிஆர்பிஎஃப் வீரர்கள், கோப்ரா வீரர்கள் படை, மத்திய ரிசர்வ் காவல் படையின் 229-வது பட்டாலியன் பிரிவினர் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

இதில், 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நக்சல்கள் பொருத்திய வெடிகுண்டுகள் வெடித்து 2 மத்திய ரிசர்வ் காவல் படையினர் படுகாயமடைந்தனர்.

கடந்த ஜனவரி 12 அன்று இதே மாவட்டத்தின் மாதெத் பகுதியில் 2 பெண்கள் உள்பட 5 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.

இது பிஜப்பூர் பகுதியில் இந்த மாதம் நடைபெற்ற இரண்டாவது பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவமாகும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT