முகப்பு
இந்தியா

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் ரசாயன டேங்கர் தீப்பற்றி எரிகிறது.

Updated On : 16 ஜனவரி, 2025 at 10:09 AM
தீப்பற்றி எரியும் லாரி - கோப்பிலிருந்து.
பகிர்:

தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், கோட்புட்லி என்ற பகுதியில், சாலையில் கவிழ்ந்த ரசாயன டேங்கர், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி என்ற பகுதியில் நேரிட்ட இந்த பயங்கர விபத்தினால், நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ரசாயன டேங்கர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், திடீரென டேங்கரில் தீப்பற்றியது.

Advertisement

டேங்கர் முழுக்க ரசாயனம் இருப்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.