தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் தீப்பற்றி எரியும் ரசாயன டேங்கர்!
தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் ரசாயன டேங்கர் தீப்பற்றி எரிகிறது.
தில்லி - ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில், கோட்புட்லி என்ற பகுதியில், சாலையில் கவிழ்ந்த ரசாயன டேங்கர், திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி என்ற பகுதியில் நேரிட்ட இந்த பயங்கர விபத்தினால், நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ரசாயன டேங்கர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, நிலை தடுமாறி கீழே விழுந்ததில், திடீரென டேங்கரில் தீப்பற்றியது.
Advertisement
Advertisement
டேங்கர் முழுக்க ரசாயனம் இருப்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளன.
மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.