FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

அட்டாரி - வாகா எல்லையில் கொடியிறக்கம்!

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

Updated On : 26 ஜனவரி 2025, 5:57 pm IST
அட்டாரி - வாகா எல்லையில் அணிவகுத்து நின்ற வீரர்கள் - ANI
பகிர்:

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் மூவர்ணக்கொடியை இக்கும் நிகழ்ச்சி இன்று மாலை கோலாகலமாக நடைபெற்றது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லையான அட்டாரி - வாகா எல்லையில் ஏராளமான மக்கள் இந்நிகழ்ச்சியைக் கண்டு ரசித்தனர்.

பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லை அருகே அட்டாரி பகுதி அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

இதேபோல் பாகிஸ்தானின் லாகூரில் இந்திய எல்லை அருகே வாகா பகுதி அமைந்துள்ளது. இந்த அட்டாரி - வாகா பகுதிகள் இருநாடுகளுக்கான எல்லையாக உள்ளது.

இந்த எல்லைப் பகுதியில் சுதந்திர நாள் மற்றும் குடியரசு நாளில் தேசியக் கொடியிறக்கும் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது.

இன்று, குடியரசு நாளையொட்டி நடைபெற்ற கொடியிறக்கும் நிகழ்ச்சியை பார்ப்பதற்கு அட்டாரி - வாகா எல்லையில் ஏராளமான மக்கள் குவிந்தனர்.

எல்லையில் இந்திய ராணுவப் படையினரும், பாகிஸ்தான் படை வீரர்களும் பங்கேற்று பாரம்பரிய முறைப்படி தேசியக் கொடி இறக்கப்பட்டது. இதில் வீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... பட்ஜெட் சடங்கும் கோமிய மருந்தும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments