முகப்பு
இந்தியா

குடியரசு நாள் விழா: வாகா எல்லையில் தேசியக் கொடியேற்றி கொண்டாட்டம்!

வாகா எல்லையில் குடியரசு நாள் விழா கோலாகலம்!

Updated On : 26 ஜனவரி 2025, 8:34 am IST
பகிர்:

புது தில்லி : குடியரசு நாள் விழா இன்று(ஜன. 26) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பஞ்சாப் மாநிலத்தில் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள வாகா எல்லையில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது.

வாகா எல்லையில் எல்லைப் பாதுகாப்புப் படை டிஐஜி எச். என். ஜோஷி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, நேற்று(ஜன. 25) மாலை கொடியிறக்கப்படும் நிகழ்ச்சியை கண்டுகளிக்க ஏராளமான மக்கள் வாகா எல்லையில் திரண்டிருந்தனர். குடியரசு நாள் விழாவயொட்டி,

Advertisement

Advertisement

சென்னையில் இன்று காலை 8 மணியளவில் ஆளுநர் ஆர். என். ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். புது தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று காலை தேசியக் கொடியேற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்ளவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.