முகப்பு
இந்தியா

ஜார்க்கண்டில் நக்சல் சுட்டுக்கொலை

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு நக்சலைட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2025 at 6:00 AM
கோப்புப்படம்
பகிர்:

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு நக்சலைட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சாய்பாசாவில் ஜார்க்கண்ட் காவல்துறை மற்றும் கோப்ரா படைக்குழுவின் 209-ஆவது பிரிவு வீரா்கள் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே புதன்கிழமை காலை மோதல் நடந்தது. இதுவரை ஒரு நக்சலைட்டின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

காவல்துறையினரின் தெரிவித்ததாவது:

மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் சாய்பாசாவில் பாதுகாப்புப் படையினருக்கும், நக்சலைட்டுகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒரு நக்சலைட்டின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்திலிருந்து இரண்டு துப்பாக்கிகள், ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவம் இடம் முழுவதும் பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தொடர்ந்து நக்ஸல் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →