முகப்பு
இந்தியா

அரசு ஊழியர் சம்பளத்தில் 10-15% பெற்றோர் வங்கிக் கணக்குக்கு! முதல்வரின் சூப்பர் யோசனை!

அசாம் போல, தெலங்கானா அரசு ஊழியர் சம்பளத்தில் 10-15% பெற்றோர் வங்கிக் கணக்குக்கு அனுப்பும் முதல்வரின் சூப்பர் யோசனை குறித்து

Updated On : 3 ஜூலை, 2025 at 10:30 AM
ரேவந்த் ரெட்டி
பகிர்:

ஹைதராபாத்: அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 - 15 சதவீதத்தை அவர்களது பெற்றோரின் வங்கிக் கணக்குக்கு வரவு வைக்கும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பல அரசு ஊழியர்கள், தங்களது தாய், தந்தையை கவனிக்கத் தவறி விடுவதால், அரசு இந்த நடவடிக்கையை எடுப்பது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் யோசனை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே அசாம் மாநிலத்தில் இந்த திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இதுபோன்ற ஒரு திட்டத்தை தெலங்கானாவிலும் செயல்படுத்துவது குறித்து விரிவான ஆய்வறிக்கையை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

மகளிர், குழந்தைகள், மாற்றுத்திறனாளி, வயதானவர்களின் நலத்திட்டங்கள் குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தின்போது, முதல்வர் ரேவந்த் ரெட்டி இதனைத் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துக் காவலர், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் மூன்றாம் பாலினத்தவர்களை பணியமர்த்துவது குறித்து ஆய்வு செய்யுமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

summary

Telangana Chief Minister Revanth Reddy has said that the feasibility of a scheme to credit 10-15 percent of the salary of government employees to their parents' bank accounts should be studied.

முழு கட்டுரையைப் படிக்க →