ரேவந்த் ரெட்டி (கோப்பு படம்)
இந்தியா

அரசு ஊழியர் சம்பளத்தில் 10-15% பெற்றோர் வங்கிக் கணக்குக்கு! முதல்வரின் சூப்பர் யோசனை!

அசாம் போல, தெலங்கானா அரசு ஊழியர் சம்பளத்தில் 10-15% பெற்றோர் வங்கிக் கணக்குக்கு அனுப்பும் முதல்வரின் சூப்பர் யோசனை குறித்து

இணையதளச் செய்திப் பிரிவு

ஹைதராபாத்: அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 - 15 சதவீதத்தை அவர்களது பெற்றோரின் வங்கிக் கணக்குக்கு வரவு வைக்கும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பல அரசு ஊழியர்கள், தங்களது தாய், தந்தையை கவனிக்கத் தவறி விடுவதால், அரசு இந்த நடவடிக்கையை எடுப்பது குறித்து ஆய்வு செய்ய முதல்வர் யோசனை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே அசாம் மாநிலத்தில் இந்த திட்டம் பயன்பாட்டில் உள்ளது. இதுபோன்ற ஒரு திட்டத்தை தெலங்கானாவிலும் செயல்படுத்துவது குறித்து விரிவான ஆய்வறிக்கையை தாக்கல் செய்யுமாறு அதிகாரிகளுக்கு ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

மகளிர், குழந்தைகள், மாற்றுத்திறனாளி, வயதானவர்களின் நலத்திட்டங்கள் குறித்த உயர்நிலை ஆய்வுக் கூட்டத்தின்போது, முதல்வர் ரேவந்த் ரெட்டி இதனைத் தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துக் காவலர், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் மூன்றாம் பாலினத்தவர்களை பணியமர்த்துவது குறித்து ஆய்வு செய்யுமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

Telangana Chief Minister Revanth Reddy has said that the feasibility of a scheme to credit 10-15 percent of the salary of government employees to their parents' bank accounts should be studied.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீது மோகன்தாஸ் பெண்கள் முன்னேற்றத்திற்கான குறியீடு!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 26

தனி நீதிபதி உத்தரவுக்குத் தடை! பொங்கலுக்கு ஜன நாயகன் ரிலீஸ் இல்லை!!

ஆனந்த வாழ்வு தரும் ஆனைமுகன்

டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்காதீர்கள்: தமிம் இக்பால்

SCROLL FOR NEXT