பாஜகவில் இணைந்த விராட் காந்த்.  
இந்தியா

பாஜகவில் இணைந்த முன்னாள் குடியரசு துணைத் தலைவர் பேரன்!

முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் மறைந்தவருமான கிருஷணகாந்தின் பேரன் விராட் காந்த் பாஜகவில் இணைந்தார்.

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னாள் குடியரசு துணைத் தலைவரும் மறைந்தவருமான கிருஷணகாந்தின் பேரன் விராட் காந்த் பாஜகவில் இணைந்தார்.

தில்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கட்சியின் தேசிய பொதுச்செயலர் தருண் சுக், பஞ்சாப் பாஜக தலைவர் சுனில் ஜாஹர் ஆகியோர் முன்னிலையில் விராட் காந்த் கட்சியில் சனிக்கிழமை இணைந்தார்.

அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதுகுறித்து ​​தருண் சுக் கூறுகையில், "இது ஒரு தலைசிறந்த செயல். அவரது மறைந்த தாத்தா கிருஷ்ண காந்த் சுதந்திர இயக்கத்திற்கு பங்களித்திருக்கிறார்.

அவர் இந்தியாவின் குடியரசு துணைத் தலைவராகவும் இருந்தார்.

இப்போது, ​​அவரது பேரன் பாஜகவில் இணைவது ஒரு பெரிய மைல்கல். காந்த் குடும்பத்தைச் சேர்ந்தவர் கட்சியை வலுப்படுத்த உதவுவார் என்று தெரிவித்தார்.

கிருஷ்ண காந்த் ஜூலை 2002 ஆம் ஆண்டு தனது அலுவலகத்தில் மாரடைப்பால் 75 வயதில் காலமானார். பதவியில் இருந்தபோதே காலமான ஒரே இந்திய குடியரசு துணைத் தலைவராக அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி படித்தால் வேலை என்பவர்கள் இனியாவது திருந்தட்டும் - முதல்வர் ஸ்டாலின்

Virat Kant, the grandson of former Vice President late Krishan Kant, joined the Bharatiya Janata Party (BJP) on Saturday in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐந்தாவது சுதந்திரம்

சென்னையில் இதழியல் கல்வி நிறுவனத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

செந்நாப் புலவர் கபிலர் அருளிய குறிஞ்சிப்பாட்டு ஆய்வுரை

கவிமணியின் பன்முகத் திறன்

குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டால்.. உச்ச நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

SCROLL FOR NEXT