முகப்பு
இந்தியா

மிகக் குறைந்த விலையில்! டிஎஸ்எல்ஆர் கேமரா தரத்தில் ரியல்மியின் பட்ஜெட் 5ஜி!

மிகக் குறைந்த விலையில் ரியல்மி வெளியிட்டுள்ள புதிய 5 ஜி மொபைல் போனைப் பற்றி...

Updated On : 8 ஜூலை 2025, 1:38 pm IST
பகிர்:

மிகக்குறைந்த விலையில் டிஎஸ்எல்ஆர் கேமரா தரத்தில் ரியல்மியின் புதிய மொபைல் போன் வெளியாகியுள்ளது.

மிகக் குறைந்த விலையில் நிறைவான சேவையில் ஸ்டைலிஷான தோற்றத்தில் மொபைல் தேடுவோருக்கு ரியல்மி சி20 5ஜி(Realme C20 5G) அற்புதமான தேர்வாக இருக்கும். அதிக செலவில்லாமல் சக்திவாய்ந்த ஸ்மார்ட் போன் தேர்வர்களுக்கான சிறப்பான போனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஸ்பிளே & டிசைன்

Advertisement

Advertisement

6.5 அங்குலத்தில் ஹெச்டி+ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவையும், 720*1600 பிக்சல்களுடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஸ் ரேட்டையும் கொண்டுள்ளது.

புராசஸ்ஸர் & பெர்ஃபார்மன்ஸ்

இந்த போன் மீடியா டெக் ஹீலியோ ஜி35 செயலியால் இயக்கப்படுகிறது. மேலும், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் உள்ளது.

கேமரா

கேசுவல் போட்டோகிராபிக்கு 8MP கேமராவும், செல்ஃபிக்கு 5MP கேமராவும் உள்ளது.

பேட்டரி & சார்ஜிங்

இந்த போனில் 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருப்பதால் ஒரு நாள் முழுவதும் தாராளமாகப் பயன்படுத்தலாம். இதனுடன் 10 வாட் சார்ஜரும் கொடுக்கப்படுகிறது.

உள் நினைவகம் & நினைவகம்

இதில், 2ஜிபி உள் நினைவகமும், 32 ஜிபி நினைவகமும் அதனுடன் மெமரி கார்டு போடும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விலை என்ன?

இந்த வகை மொபைலில் தற்போது 4ஜி மட்டுமே விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை ரூ.6,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதே மாடலில் 5ஜி மொபைல் ஃபிளிப் கார்ட், அமேசான் போன்ற தளங்களில் சலுகை மற்றும் தள்ளுபடி விலையில் ரூ.7,499-க்கு கிடைக்கின்றன. இந்த மொபைலுக்கு ஃபிளிப் கார்ட் தளத்தில் 3 லட்சத்துக்கு அதிகமான மதிப்புரைகளும் வழங்கப்பட்டுள்ளன.

summary

Realme Launches Budget-Friendly 5G Smartphone with DSLR-like Camera

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments