இண்டிகோ விமானம்  கோப்புப்படம்
இந்தியா

அவசரமாகத் தரையிறங்கிய இண்டிகோ விமானம்! ஏன்?

அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

பாட்னாவில் இருந்து தில்லிக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் ஒன்று பறவை மோதியதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பிகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயணன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 169 பயணிகளுடன் இன்று காலை 8.42 மணிக்கு இண்டிகோ விமானம்(6E509) ஒன்று தில்லிக்கு புறப்பட்டது.

புறப்பட்ட சில நொடிகளில் விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் மீண்டும் பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானத்தை சரிசெய்யும் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விமானத்தில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக விமானத்தைத் தரையிறக்க விமானியிடமிருந்து கட்டுப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வந்தது. அதன்படி விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. அனைத்து பயணிகளும் பாதுகாப்பாக உள்ளனர். பயணிகளை அனுப்ப வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு தேவையான வசதிகளும் செய்து தரப்படுகின்றன. பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம். எங்கள் பயணிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. விமானத்தின் நிலை குறித்து பணியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்" என்று பாட்னா விமான நிலையம் கூறியுள்ளது.

A Delhi-bound IndiGo flight from Patna, with 169 passengers on board, had to make an emergency landing after a bird hit.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்ல நாள் இன்று: தினப்பலன்கள்!

இன்றுமுதல் 50% வரி! டிரம்ப்பின் அழைப்பை 4 முறை மறுத்த பிரதமர் மோடி?

கோவாவில் அக்டோபா் - நவம்பரில் ஃபிடே உலகக் கோப்பை செஸ் போட்டி

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

SCROLL FOR NEXT