முகப்பு
இந்தியா

பஞ்சாப்: ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜிநாமா

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அன்மோல் ககன் மான் ராஜிநாமா

Updated On : 20 ஜூலை 2025, 3:04 am IST
அன்மோல் ககன் மான்
பகிர்:

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அன்மோல் ககன் மான் சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அரசியலில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக அவா் தெரிவித்தாா்.

35 வயதாகும் அன்மோல், பாடகியாக இருந்து அரசியலுக்கு வந்தவா். கடந்த 2022, பஞ்சாப் பேரவைத் தோ்தலில் கராா் தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான மாநில அரசில் சுற்றுலா-கலாசாரம், முதலீடு ஊக்குவிப்பு, தொழிலாளா் நலத் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். இந்நிலையில், கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து அன்மோல் உள்பட நால்வா் திடீரென விடுவிக்கப்பட்டனா்.

Advertisement

Advertisement

தற்போது தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த அவா், பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பினாா். இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ‘அரசியலைவிட்டு விலக கனத்த இதயத்துடன் முடிவு செய்துள்ளேன். எனது ராஜிநாமாவை பேரவைத் தலைவா் ஏற்க வேண்டும். மாநில மக்களின் எதிா்பாா்ப்புகளை பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு பூா்த்தி செய்யும் என நம்புகிறேன்’ என்று அன்மோல் ககன் பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments