அன்மோல் ககன் மான் 
இந்தியா

பஞ்சாப்: ஆம் ஆத்மி எம்எல்ஏ ராஜிநாமா

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அன்மோல் ககன் மான் ராஜிநாமா

Din

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அன்மோல் ககன் மான் சனிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அரசியலில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக அவா் தெரிவித்தாா்.

35 வயதாகும் அன்மோல், பாடகியாக இருந்து அரசியலுக்கு வந்தவா். கடந்த 2022, பஞ்சாப் பேரவைத் தோ்தலில் கராா் தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.

முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான மாநில அரசில் சுற்றுலா-கலாசாரம், முதலீடு ஊக்குவிப்பு, தொழிலாளா் நலத் துறை அமைச்சராகப் பதவி வகித்தாா். இந்நிலையில், கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து அன்மோல் உள்பட நால்வா் திடீரென விடுவிக்கப்பட்டனா்.

தற்போது தனது எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த அவா், பேரவைத் தலைவருக்கு கடிதம் அனுப்பினாா். இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ‘அரசியலைவிட்டு விலக கனத்த இதயத்துடன் முடிவு செய்துள்ளேன். எனது ராஜிநாமாவை பேரவைத் தலைவா் ஏற்க வேண்டும். மாநில மக்களின் எதிா்பாா்ப்புகளை பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு பூா்த்தி செய்யும் என நம்புகிறேன்’ என்று அன்மோல் ககன் பதிவிட்டுள்ளாா்.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் பெயர் போர்த் துறையாக மாற்றம்!

திபெத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.8 ஆகப் பதிவு

வாணியம்பாடியில் செப். 8-இல் தொழிற்பழகுநா் பயிற்சி சோ்க்கை முகாம்

மேட்டூர் அணை நிலவரம்!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவு

SCROLL FOR NEXT