உ.பி.யில் சிஆர்பிஎஃப் வீரர் மீது தாக்குதல்: 3 கன்வாரியாக்கள் கைது
உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப். வீரர் மீது தாக்குதல் நடத்திய 3 கன்வாரியாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உ.பி.யில் சி.ஆர்.பி.எஃப். வீரர் மீது தாக்குதல் நடத்திய 3 கன்வாரியாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், பிரம்மபுத்ரா ரயிலில் ஜார்க்கண்டில் உள்ள பைத்யநாத் தாம் செல்வதற்காக கன்வாரியாக்கள் (சிவ பக்தர்கள்) நேற்று மிர்சாபூர் ரயில் நிலையம் வந்தனர். அப்போது அவர்களுக்கும், அங்கிருந்த மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் (CRPF) சேர்ந்த வீரருக்கும் இடையே டிக்கெட் வாங்குவதில் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த கன்வாரியாக்கள் சிஆர்பிஎஃப் வீரரை கண்மூடித்தனமாக தாக்கினர். இந்த விடியோ சமூகவலைதளங்களில் பரவி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு 3 கன்வாரியாக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும் அவர்கள் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
Advertisement
Advertisement
மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் மருத்துவமனையில் அனுமதி
சிவ பக்தர்களின் வருடாந்திர யாத்திரையான கன்வார் யாத்திரை கடந்த ஜூலை 11 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூலை 23 ஆம் தேதி நிறைவடைகிறது. பக்தர்கள் வெறுங்காலுடன் நடந்து சென்று கங்கையிலிருந்து புனித நீரை குடங்களில் சுமந்து தங்கள் பகுதியில் உள்ள சிவனுக்கு அபிஷேகம் செய்வது இந்த யாத்திரையின் சிறப்பம்சமாக கருதப்படுகிறது.