முகப்பு
இந்தியா

ஆர்சிபி பேரணி விவகாரம்! அரசியல் செயலாளர் விடுவிப்பு

ஆர்சிபி வெற்றிப் பேரணி விவகாரத்தில் முறையான ஆலோசனை வழங்காத அரசியல் செயலாளர் கே. கோவிந்தராஜ் விடுவிப்பு

Updated On : 6 ஜூன் 2025, 6:41 pm IST
பகிர்:

ஆர்சிபி வெற்றிப் பேரணி விவகாரத்தில் முறையான ஆலோசனை வழங்காத அரசியல் செயலாளர் விடுவிக்கப்பட்டார்.

பெங்களூரு ஆர்சிபி அணியின் வெற்றிப் பேரணியின்போது, கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

முறையான முன்னேற்பாடுகள் இல்லாமல் பேரணிக்கு அனுமதி அளித்த மாநில அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும்நிலையில், இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், வெற்றிப் பேரணி குறித்து, முதல்வர் சித்தராமையாவுக்கு முறையான ஆலோசனை வழங்கத் தவறியதாக, அரசியல் செயலாளர் பொறுப்பிலிருந்து கே. கோவிந்தராஜ் விடுவிக்கப்பட்டார்.

வேலைநாள் அல்லாத ஞாயிற்றுக்கிழமையில் பாராட்டு விழாவை வைத்துக் கொள்ளலாம் என்று கர்நாடக காவல்துறையின் அறிவுரையை மறுத்து, முறையான முன்னேற்பாடுகளின்றி நிகழ்ச்சியை நடத்தக் கூறியதுடன், முதல்வர் சித்தராமையாவுக்கு முறையான ஆலோசனை வழங்கவும் தவறியதால், அரசியல் செயலாளர் பொறுப்பில் இருந்து கே. கோவிந்தராஜ் விடுவிக்கப்பட்டார். இவர் மாநில ஒலிம்பிக் தலைவராகவும் உள்ளார்.

மேலும், அம்மாநில உளவுத்துறை ஏடிஜிபி தலைவர் ஹேமந்த் நிம்பல்கரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments