FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மீண்டும் தலைதூக்கிய கரோனா: ஏழு ஆயிரத்தை நெருங்குகிறது!

நாட்டில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் கரோனா பாதிப்பு ஏழு ஆயிரத்தை நெருங்குகிறது.

Updated On : 10 ஜூன் 2025, 2:48 pm IST
கரோனா பரிசோதனை - கோப்புப்படம்
பகிர்:

செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் நிறைவுபெற்ற 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 324 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,815 ஆக உயர்ந்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, புதிதாக 324 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தில்லி, ஜார்க்கண்ட், கேரளம் என தலா ஒருவர் கரோனாவுக்கு பயாகியிருக்கறிர்கள் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கரோனாவுக்கு பலியான மூன்று பேரும், ஏற்கனவே உடல்நலப் பாதிப்புக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தவகள் என்றும் கூறப்படுகிறது.

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவது சுகாதார நிபுணர்களுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் இணை நோய் உள்ளவர்களின் இறப்புகளும் மக்களுக்கு அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.

தில்லியில் 90 வயது பெண்மணி சிறுநீரகம் பாதித்து தீவிர சிகிச்சையில் இருந்து வந்ததாகவும், அவரது இறப்புக்கு கரோனா காரணமில்லை என்றும், அவர் உடல்நலக் குறைவால்தான் உயிரிழந்ததாகவும் மருத்துவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர்.

இதையும் படிக்க.. உண்மையான அன்னபெல்லா பொம்மைக்கு என்ன ஆனது? மக்கள் கலக்கம்!

ஜார்க்கண்டிலும் 44 வயது நபர், அதிக ரத்த அழுத்தம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் பலியானதாகவும் கேரளத்தில் 79 வயது நபர் கரோனாவும் பாதித்து, உடல் உறுப்புகள் செயலிழந்தநிலையில்தான் பலியானதாகவும் கூறப்படுகிறது. இவருக்கு ஏற்கனவே பல உடல்நலப் பிரச்னைகள் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் முகக்கவசம் அறிந்துகொள்ளுமாறு மருத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். அச்சப்பட வேண்டாம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments