விமான விபத்து: அவசர உதவி எண்கள் அறிவிப்பு!
குஜராத் விமான விபத்தையடுத்து மத்திய அரசின் உதவி எண்கள் அறிவிப்பு..
ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில் மத்திய அரசின் உதவி எண்களை ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
குஜராத் மாநிலம், ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.17-க்கு லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா பயணிகள் விமானம் ஒன்று, புறப்பட்டு சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. ஆமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் சுமார் 242 பயணிகள் பயணித்ததாக கூறப்படுகிறது. விமானம் விழுந்து தீப்பிடித்த நிலையில், அந்த இடம் முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.
Advertisement
Advertisement
இதையடுத்து, 1800 222 271, 1800 5691 444 என்ற மத்திய அரசின் உதவி எண்களில் அழைக்கலாம் என ஏர் இந்தியா அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
011 - 2461 0843, 96503 91859 ஆகிய எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என விமான போக்குவரத்து தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.