அஸ்ஸாம் ஆற்றில் கவிழ்ந்த படகு: மூவர் மாயம்!
பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்ததில் மூன்று பேர் மாயம்...
அஸ்ஸாமில் பிரம்மபுத்திரா ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்பட மூன்று பேர் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கினர்.
அஸ்ஸாம் மாநிலம், நல்பாரி மாவட்டத்துக்குள்பட்ட பகுதியில் பிரம்மபுத்திரா ஆற்றில் 2 மாணவர்கள் உள்பட மூவர் நாட்டுப்படகில் வெள்ளிக்கிழமை காலை பயணித்துள்ளனர்.
இந்த நிலையில், திடீரென படகு கவிழ்ந்ததில் மூவரும் ஆற்றில் மூழ்கியுள்ளனர்.
Advertisement
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக் குழுவினர் நீரில் மூழ்கியவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.