முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேசத்தில் மின்னல் பாய்ந்து 4 பேர் பலி

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் பாய்ந்து 4 பேர் வெள்ளிக்கிழமை பலியானார்கள்.

Updated On : 20 ஜூன், 2025 at 5:22 PM
மின்னல்(கோப்புப் படம்)
பகிர்:

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் மின்னல் பாய்ந்து 4 பேர் வெள்ளிக்கிழமை பலியானார்கள்.

முதல் சம்பவத்தில், சராய் அகில் பகுதியில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த நான்கு பேர் மீது மின்னல் பாய்ந்தது. உடனே அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால் அங்கு சதீஷ் (13) மற்றும் மணி (13) இருவரும் பலியானதாக அறிவிக்கப்பட்டது. மற்ற இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.

Advertisement

இரண்டாவது சம்பவம், தாரா கா புரா கிராமத்தில் நடந்ததுது. எருமைகளை மேய்ச்சலுக்காக வெளியே கொண்டு சென்றபோது மின்னல் பாய்ந்து கோவிந்த் (15) சம்பவ இடத்திலேயே பலியானான்.

கிரீஸ்: 2 மீன்பிடி படகுகளில் வந்த 600 அகதிகள் மீட்பு!

மேலும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த ரூபா தேவியும் (12) பலியானார்.

அதேசமயம் மோஹித் (10) சராய் அகிலிள் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.