இந்தியா

அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மீதான வழக்குகள்!

கடந்த 10 ஆண்டுகளில் இருவர் மீதான அமலாக்க வழக்குகளில் மட்டுமெ தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

DIN

கடந்த 10 ஆண்டுகளில் (2024 - 25) அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 193 பேர் மீது அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தாலும், அவர்களில் 2 பேர் மீதான வழக்குகளில் மட்டுமே குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதனிடையே, இந்திய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான குற்றவியல் வழக்குகள் குறித்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆய்வில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் 28 சட்டப்பேரவைகளில் 4,123 சட்டப்பேரவை உறுப்பினர்களில் 4,092 பேரின் பிரமாணப் பத்திரங்கள் மீது பகுப்பாய்வு மேற்கொண்டதில், அவர்களில் சுமார் 45 சதவிகிதத்தினர் மீது குற்றவியல் வழக்குகள் இருப்பது தெரிய வந்தது.

மேலும், 29 சதவிகிதத்தினர் மீது கொலை மற்றும் கடத்தல் உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டு வழக்குகளும் உள்ளன. அதிகபட்சமாக, ஆந்திரத்தில் 79 சதவிகிதமாக 174 பேரில் 138 பேர் மீது குற்ற வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 59 சதவிகித சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயி கொலை: போலீஸாா் விசாரணை

தில்லியில் இருந்து தொடங்கும் ஐஆா்சிடிசியின் இந்தியாவின் கிழக்கில் இருக்கும் கோயில்களுக்கான ஆன்மிக சுற்றுப் பயணம்!

தில்லியில் ஏ.ஐ. உச்சிமாநாடு: 10,000 போலீஸாா் பாதுகாப்புப் பணி

தில்லியில் இரவு நேர தங்குமிடங்களின் வசதிகளை மதிப்பீடு செய்ய அரசு முடிவு!

ஜனக்புரியில் பைக்கில் சென்றவா் இறந்த சம்பவம் எதிரொலி: பாதுகாப்பு சோதனைகளுக்கு பொதுப் பணித் துறை உத்தரவு!

SCROLL FOR NEXT