கோப்புப்படம்.  
இந்தியா

ஜார்க்கண்டில் கருகிய நிலையில் இரட்டை குழந்தைகள், பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஜார்க்கண்டில் கருகிய நிலையில் பெண் மற்றும் அவரின் இரட்டை குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஜார்க்கண்டில் கருகிய நிலையில் பெண் மற்றும் அவரின் இரட்டை குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 22 வயது பெண் மற்றும் அவரது இரட்டை குழந்தைகளின் சடலங்கள் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு பிரதாப்பூர் காவல் நிலையப் பகுதியில் உள்ள கரிஹாரா கிராமத்தில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டதாக அவர்கள் மேலும் கூறினர்.

சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பிரதாப்பூர் காவல் நிலைய பொறுப்பாளர் காசிம் அன்சாரி தெரிவித்தார்.

கேரளம்: தேநீர் என நம்ப வைத்து 12 வயது சிறுவனுக்கு மது கொடுத்த பெண் கைது

இந்த மரணங்கள் தற்செயலானதா, அல்லது தற்கொலையா அல்லது யாராவது கொலை செய்தனரா என்பது விசாரணையில் தெரியவரும் என்று அவர் கூறினார்.

இறந்த பெண்ணின் கணவர் தில்லியில் வேலை செய்கிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை பிரதமர் இந்தியா வருகை!

சென்னையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அமேசானில் எச்ஆர் பிரிவில் 15% பணிநீக்கம் செய்ய முடிவு?

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 18 மாவட்டங்களில் மழை!

நோமன் அலி 10 விக்கெட்டுகள்: தெ.ஆ. ஆதிக்கத்துக்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி!

SCROLL FOR NEXT