இந்தியா

பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை; காவல் அதிகாரி கைது!

உத்தரப் பிரதேசத்தில் பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை அளித்த உதவி ஆய்வாளர் கைது

DIN

உத்தரப் பிரதேசத்தில் பெண் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொல்லை அளித்த உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில் மகோரா காவல் நிலையத்தில் புதன்கிழமை இரவுப் பணியின்போது, உதவி ஆய்வாளரான மோகித் ராணா பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறி, மூத்த காவல் கண்காணிப்பாளரிடம் பெண் உதவி ஆய்வாளர் புகார் அளித்தார்.

மேலும், தன்னிடம் ஆபாசப் படங்களைப் பார்க்கச் சொல்லி வற்புறுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதனடிப்படையில், மோகித்திடம் விசாரணை மேற்கொண்டபோது, தப்பிக்க முயன்றதோடு, ஆதாரங்களை அழிக்கும் நோக்கில், ஆபாசப் படங்கள் இருந்த தனது ஸ்மார்ட்வாட்ச் மற்றும் மொபைல் போனையும் மோகித் வெளியே வீசி எறிந்தார்.

இருப்பினும், மோகித்திடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பெண் உதவி ஆய்வாளரின் பாலியல் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதால், அவரை கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மோகித்தின் மொபைல் போன் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்சை தேடும் பணியிலும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

ஆந்திரம்: மது வாங்க ரூ.10 கொடுக்க மறுத்த நபரைக் கொன்ற இளைஞர்

பழைய செய்திகளைப் படித்துவிட்டு குற்றச்சாட்டு வைக்கிறார் விஜய்: அமைச்சர் அன்பில் மகேஸ்

பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா விலை உயர்வு அறிவிப்பு!

SCROLL FOR NEXT