பிரதிப் படம் ENS
இந்தியா

விமான நிலையக் குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலம்

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலம் மீட்பு

DIN

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் குப்பைத் தொட்டியில் குழந்தையின் சடலத்தை மீட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பையின் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்த குப்பைத் தொட்டியில் புதிதாய் பிறந்த குழந்தை இருப்பதாக விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, குப்பைத் தொட்டியில் இருந்த குழந்தையின் உடல் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது. இருப்பினும், குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விமான நிலையத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள சிசிடிவி காட்சிகளை விசாரித்து வருகின்றனர். விமான நிலையத்துக்கு வந்து சென்ற பயணிகளின் விவரங்கள் மட்டுமின்றி, மருத்துவமனைகள், ஆதரவற்றோர் இல்லங்களிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நல்லகண்ணுக்கு மீண்டும் செயற்கை சுவாசம்! அமைச்சர் மா. சுப்பிரமணியன்

விஜயகாந்தைப் போல 2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்: டிடிவி தினகரன்

நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

ஆம்பூர் கலவர வழக்கில் தீர்ப்பு! 22 பேர் குற்றவாளி

நித்ய கன்னி... மனு பாக்கர்!

SCROLL FOR NEXT