பெங்களூரு விமான நிலையத்தில் கொரிய பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்! ஊழியர் கைது!
பெங்களூரு விமான நிலையத்தில் கொரிய பெண் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளானது பற்றி...
பெங்களூரு விமான நிலையத்தில் கொரியாவில் இருந்து சுற்றுலா வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அவருக்கு பாலியல் தொல்லை அளித்து விமான நிலைய ஊழியரைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் சுற்றுலாவுக்காக வருகைதந்த கொரிய நாட்டைச் சேர்ந்த இளம் பெண் கடந்த ஜனவரி 19 ஆம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து சொந்த நாட்டுக்குப் புறப்படவிருந்தார்.
Advertisement
Advertisement
குடியேற்றத் துறை சோதனைக்குப் பிறகு விமானத்துக்குச் செல்ல தயாரான போது, அவரை அணுகிய விமான நிலைய ஊழியர் அஃபான் அகமது என்பவர், அவரின் உடமை பைகளில் சப்தம் வருவதாகவும் சோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பின்னர் அவரை தனிப்பட்ட முறையில் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி, கழிப்பறை பகுதி அருகே அழைத்துச் சென்று அவருக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
அவர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அப்பகுதியைவிட்டு உடனடியாக அகமது புறப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பெங்களூரு விமான நிலைய காவல் துறையினரிடம் கொரிய நாட்டைச் சேர்ந்த பெண் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் அடிப்படையில் குற்றம்சாட்டப்பட்ட அகமதுவை கைது செய்து பெங்களூரு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sexual assault on a Korean woman at Bengaluru airport! Employee arrested
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.