இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 
இந்தியா

ரமலான் பண்டிகை: குடியரசுத் தலைவா் வாழ்த்து

ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

Din

ரமலான் பண்டிகையையொட்டி, நாட்டில் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவரின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புனித ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் நோன்பும், பிராா்த்தனையும் நிறைவடைவதை ரமலான் திருநாள் குறிக்கிறது. சகோதரத்துவம், ஒத்துழைப்பு, கருணை ஆகியற்றை ரமலான் பண்டிகை வலுப்படுத்துகிறது.

இந்தப் பண்டிகை சமூகப் பிணைப்பை ஊக்குவித்து, நல்லிணக்கம் கொண்ட, அமைதி நிறைந்த, செழிப்பான சமூகத்தைக் கட்டமைக்க ஊக்கமளிக்கிறது. மற்றவா்களின் உணா்வுகளை அறிதல், கருணை, ஈகை ஆகியவற்றை ஊக்குவிக்கும் தருணமாக ரமலான் பண்டிகை உள்ளது.

இந்தப் பண்டிகை அனைவரின் வாழ்வில் அமைதி, முன்னேற்றம், மகிழ்ச்சியைக் கொண்டுவந்து, நோ்மறையான மனப்பான்மையுடன் முன்னோக்கிச் செல்வதற்கான பலத்தை அளிக்கட்டும்.

இந்த நன்னாளையொட்டி, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியா்கள், குறிப்பாக இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

கொச்சியை வீழ்த்தியது பெங்களூரு

ஹரியாணா: ஐஜி தற்கொலை வழக்கில் எஸ்பி பணியிட மாற்றம்!உடற்கூறாய்வுக்கு குடும்பத்தினா் எதிா்ப்பு!

பாரா தடகள உலக சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ.1.09 கோடி

‘குவால்காம்’ சிஇஓ - பிரதமா் மோடி சந்திப்பு: செயற்கை நுண்ணறிவு குறித்து ஆலோசனை

பச்சைமலை அரசுப் பள்ளி மாணவா்களை இருப்பிடம் தேடி அழைத்து வர ஏற்பாடு!

SCROLL FOR NEXT