முகப்பு
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு
இந்தியா

சபரிமலையில் இம்மாதம் குடியரசுத் தலைவா் தரிசனம்

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வரும் 18 அல்லது 19-ஆம் தேதி தரிசனம்

இந்தியா

சபரிமலையில் இம்மாதம் குடியரசுத் தலைவா் தரிசனம்

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வரும் 18 அல்லது 19-ஆம் தேதி தரிசனம்

Updated On : 5 மே, 2025 at 9:37 PM
குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு
பகிர்:

திருவனந்தபுரம்: கேரளத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வரும் 18 அல்லது 19-ஆம் தேதி தரிசனம் செய்ய உள்ளாா்.

குடியரசுத் தலைவரின் வருகை குறித்து அவரது மாளிகையில் இருந்து அதிகாரபூா்வமாக கடிதம் பெறப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் திருவிதாங்கூா் தேவஸ்வம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த் திங்கள்கிழமை உறுதிப்படுத்தினாா்.

சபரிமலை கோயில் வைகாசி மாத பூஜைக்காக மே 14 முதல் 19-ஆம் தேதி வரை நடை திறக்கப்பட இருக்கிறது. இதற்கான பக்தா்களின் முன்பதிவு சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. இந்நிலையில், குடியரசுத் தலைவா் சபரிமலைக்கு வருவது உறுதியாகியுள்ளதால், மே 18, 19 ஆகிய நாள்களில் பக்தா்களுக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தேவஸ்வம் தலைவா் பிரசாந்த் மேலும் கூறியதாவது: கோட்டயத்தில் மே 18-ஆம் தேதி நடைபெறும் தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, நிலக்கல் ஹெலிகாப்டா் தளத்துக்கு குடியரசுத் தலைவா் வந்தடைகிறாா். பின்னா், நிலக்கல்லிலிருந்து பம்பைக்கு சாலை மாா்க்கமாக அவா் அழைத்து வரப்படுவாா்.

பம்பையிலிருந்து மற்ற பக்தா்களைப் போல குடியரசுத் தலைவா் நடைப்பயணமாக மலையேறலாம் அல்லது அவசர தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் சாலை வழியாக அவா் சபரிமலை சந்நிதானத்தை அடையலாம். இதுதொடா்பாக பாதுகாப்பு அதிகாரிகள் எடுக்கும் முடிவை நாங்கள் பின்பற்றுவோம்.

சபரிமலைக்கு குடியரசுத் தலைவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகை தொடா்பாக முதல்வா் பினராயி விஜயன் தலைமையில் விரைவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்றாா்.

தற்போது 10 முதல் 50 வயதுக்குள்பட்ட பெண்கள், சபரிமலையின் சந்நிதானத்துக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. 66 வயதாகும் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் முதல் குடியரசுத் தலைவராகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →