முகப்பு
இந்தியா

இந்தியா - பாக். பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா, ஜி7 நாடுகள் அழைப்பு!

இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண வலியுறுத்தல்...

Updated On : 10 மே, 2025 at 11:42 AM
தாக்குதல் நடத்தப்பட்ட பகுதி
பகிர்:

வாஷிங்டன்: இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தீர்வு காண தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்கா செய்ய தயாராக இருப்பதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்திருக்கிறார்.

அதேபோல, ஜி 7 நாடுகளும் கூட்டாக இன்று(மே 10) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘போர்ப் பதற்றத்தை உடனடியாக தணிக்கவும், அமைதி திரும்புவதற்கான நோக்கத்துடன் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட இரு நாடுகளையும் வலியுறுத்துவதாகத்’ தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 நாள்களாக எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது.

வெள்ளிக்கிழமை(மே 9) எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் 26 இடங்களில், ட்ரோன்கள், உயர் ரக ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் தாக்க முயன்றது. அதேநேரத்தில், இந்திய விமானப்படை தளங்களை தாக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன.

அதிவேக ஏவுகணைகளால் பஞ்சாப் விமானப்படை தளங்களை பாகிஸ்தான் தாக்க முயற்சித்துள்ளது. இந்தியா தரப்பில் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →