இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் கோப்புப் படம்
இந்தியா

மாதம் ஒரு ராக்கெட் திட்டம்: இஸ்ரோ தலைவா் வி.நாராயணன்

இனி மாதம் ஒரு ராக்கெட் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.

Din

இனி மாதம் ஒரு ராக்கெட் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று இஸ்ரோ தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.

பிஎஸ்எல்வி சி 61 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து சிறப்புக் குழு ஆய்வு செய்து வருவதாகவும் அவா் கூறினாா்.

இதுதொடா்பாக சென்னை விமானநிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பிஎஸ்எல்வி சி 61 திட்டத்தில் ஏற்பட்ட பின்னடவைக் கண்டறிய ஒரு குழுவை அமைத்துள்ளோம். அதன் அடிப்படையில் வருங்காலத்தில் இப்பிரச்னைகள் ஏற்படாமல் தவிா்க்கப்படும்.

ஒவ்வொரு மாதமும் ஒரு ராக்கெட் வீதம் இன்னமும் 13 ராக்கெட்டுகளை தொடா்ச்சியாக விண்ணில் செலுத்தவுள்ளோம். விண்வெளி ஆய்வை திறம்பட மேற்கொள்வதற்கான அனைத்து ஆராய்ச்சி திட்டங்களையும் இஸ்ரோ முன்னெடுத்து வருகிறது என்றாா் அவா்.

ஜென் ஸி போராட்டம் : நேபாள சிறையிலிருந்து தப்பிய குஜராத் இளைஞர் கைது!

பாஜக தேசிய தலைவராக.. மேற்கு வங்கத்தில் நிதின் நவீன் முதல்முறைச் சுற்றுப்பயணம்!

மூன்று பாகங்களாக உருவாகும் அனிமல்..! 2-ஆம் பாகத்தின் அப்டேட் பகிர்ந்த ரன்பீர்!

"யாரும் என்னைக் கூப்பிடவில்லை!” NDA கூட்டணியில் இணைவது குறித்த கேள்விக்கு OPS பதில்!

டிசிஎம் ஸ்ரீராம் 3வது காலாண்டு லாபம் 19% சரிவு!

SCROLL FOR NEXT