ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ANI
இந்தியா

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை!

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஆளுநர் மனோஜ் சின்ஹா சந்திப்பு பற்றி..

DIN

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் கடந்த மே 7 ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதற்கு எதிராக பாகிஸ்தான் ராணுவமும் ஜம்மு-காஷ்மீரில் உரி, பூஞ்ச், ரஜோரி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான தாக்குதல் நடத்தியது. இதில் எல்லைப் பகுதிகளில் வசித்து வந்த 16 பேர் உயிரிழந்ததாக மத்திய அரசு தெரிவித்தது.

மேலும், பாகிஸ்தான் தாக்குதல் நடத்திய பகுதிகளில் உள்ள மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்தும் வாழ்வாதாரம் இன்றியும் தவித்து வருகின்றனர். அரசு தங்களின் வருமானத்திற்கு உதவ வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, பூஞ்ச் பகுதியில் இந்திய ராணுவத்தினர் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினரைச் சந்தித்துப் பேசினார். வீரர்களுடன் உரையாடிய அவர், அவர்களின் தைரியத்துக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

பின்னர் பூஞ்ச் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து மக்கள் மத்தியில் பேசிய ஆளுநர், "பாகிஸ்தானின் ஷெல் தாக்குதலில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு இந்திய அரசும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகமும் துணை நிற்கும்.

இறந்தவரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்" என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவந்த மேனி... ஜன்னத் ஜுபைர்!

மக்களிடம் செல், மக்களிடம் கற்றுக்கொள்... அண்ணா வழியில் விஜய்!செய்திகள்: சில வரிகளில் 30.7.25 |Vijay

அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாதது ஏன்? முதல்வர் பதில் சொல்லட்டும்! -இபிஎஸ் | Eps | Mkstalin

கிராண்ட்மாஸ்டர் திவ்யாவுக்கு உற்சாக வரவேற்பு! தாயகம் திரும்பியதும் அவர் சொன்ன விஷயம்!

பண்டையகால இந்தியாவின் மருத்துவம், உளவியல், யோகா!| Ancient India | IndianMedicine | Yoga

SCROLL FOR NEXT