நாட்டுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தவர் நேரு! -ராகுல் காந்தி அஞ்சலி
நேரு நமக்கு வழிகாட்டியாக திகழ்பவர் - ராகுல் காந்தி
இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவாஹர்லால் நேருவின் நினைவு நாள்(மே 27) இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. நேருவின் நினைவு நாளையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் பல்வேறு தலைவர்களும் நேருவுக்கு மரியாதை செலுத்தினர்.
இந்தநிலையில், நேருவின் நினைவு நாளையொட்டி தமது எக்ஸ் தளப் பக்கத்தில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: “ஒருங்கிணைந்ததொரு வலுவான இந்தியா என்ற கனவுடன் சுதந்திர இந்தியாவுக்காக வலுவானதொரு அடித்தளத்தை தமது தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய தலைமைப் பண்பால் அமைத்துக் கொடுத்து விட்டுச் சென்றவர் நேரு.
சமூக நீதி, நவீனத்துவம், கல்வி, அரசமைப்பு, ஜனநாயகம் ஆகியவற்றை அமைப்பதற்கான அன்னாரது பங்களிப்பு மதிப்பிற்கரியது.
Advertisement
Advertisement
’இந்தியாவின் ஜவாஹர்’ சித்தாந்தங்கள் நமக்கு வழிகாட்டியாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.