முகப்பு
இந்தியா

தாணேவில் புதிதாக 12 கரோனா பாதிப்புகள் உறுதி! சிகிச்சையில் 72 பேர்!

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதைப் பற்றி...

Updated On : 28 மே 2025, 8:12 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மகாராஷ்டிரத்தின் தாணேவில் புதியதாக 12 கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தாணேவில் புதியதாக 12 கரோனா பாதிப்புகள் உறுதியாகியுள்ளதால், தற்போது சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளதாக, தாணே நகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தாணேவில் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த கரோனா நோயாளிகளில் 10 பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 16 பேர் அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Advertisement

Advertisement

இதில், 45 கரோனா நோயாளிகள் தங்களது வீட்டிலேயே சிகிச்சைப் பெற்று வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது:

”இந்தப் பரவலை நாங்கள் மிகவும் நெருக்கமாகக் கவனித்து வருகிறோம், நோய் பரவலைக் கட்டுப்படுத்தவும், பாதிக்கப்பட்டோருக்கு உரிய சிகிச்சையளிக்கவும் சுகாதாரத் துறை தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.” எனக் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சங்கர் மகாதேவன் இசையில் 22 மொழிகளில் விழிப்புணர்வு பாடல்: அமைச்சர் நிதின் கட்கரி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments