ஜார்க்கண்ட்: கைவிடப்பட்ட வீட்டில் இருந்து 4 நாட்டு வெடி குண்டுகள் மீட்பு
ஜார்க்கண்டின் தன்பாத்தில் கைவிடப்பட்ட வீட்டில் இருந்து 4 நாட்டு வெடி குண்டுகள் மீட்கப்பட்டன
ஜார்க்கண்டின் தன்பாத் மாவட்டத்தில் கைவிடப்பட்ட வீட்டில் இருந்து நான்கு நாட்டு வெடி குண்டுகள் மீட்கப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
பௌராவில் உள்ள பள்ளிக்கு அருகே வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், குறைந்த தீவிரம் கொண்டதாகக் கூறப்படும் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர்கள் மேலும் கூறினர்.
சிந்திரி துணைப்பிரிவு காவல் அதிகாரி அசுதோஸ் குமார் சத்யம் கூறுகையில், "ரகசிய தகவலைத் தொடர்ந்து, கைவிடப்பட்ட வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ஒரு அறையில் இருந்து நான்கு குண்டுகள் மீட்கப்பட்டன.
Advertisement
Advertisement
பின்னர் அவை ஒரு தண்ணீர் கேனில் போட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக உள்ளூர் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜார்க்கண்டில் தொழிலதிபர் சுட்டுக்கொலை
நாங்கள் விசாரித்து குண்டுகளை வைத்திருந்த நபர்களைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம். குற்றவாளிகள் இப்பகுதியில் ஒரு பெரிய சம்பவத்தை செய்ய திட்டமிட்டுள்ளார்களா என்பதையும் நாங்கள் கண்டறிய முயற்சிக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Four live crude bombs were recovered from an abandoned house in Jharkhand's Dhanbad district, police said on Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.