சைபர் குற்றங்கள் 
இந்தியா

சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட 654 செல்போன் எண்கள் முடக்கம்

சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட 654 செல்போன் எண்கள் முடக்கம்

இணையதளச் செய்திப் பிரிவு

வாரணாசியில் சைபர் குற்றங்களுக்காகப் பயன்படுத்தப்பட்ட 654 செல்போன் எண்களையும், 335 ஐஎம்இஐ எண்களையும் சைபர் குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நாடு முழுவதும் சைபர் குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், மக்களிடமிருந்து வரும் குற்றச்சாட்டுகளை அடுத்து விசாரணை நடத்தி, சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படும் செல்போன் எண்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வாரணாசியில் மட்டும் 654 செல்போன் எண்கள் முடக்கப்பட்டுள்ளன. மேலும், 6 போலியான கால் சென்டர்கள் நடத்தி முறைகேடுகளை செய்து வந்த 84 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகள், பொதுவிடங்களிலும், மக்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு, கடந்த அக்டோபர் மாதம் நாடு முழுவதும் நடத்தப்பட்டுள்ளது.

654 cell phone numbers used in cybercrimes frozen

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்! தவெக உள்பட 20 கட்சிகள் புறக்கணிப்பு!

இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம்! - கம்மின்ஸ் ஸ்டைலில் மிரட்டிய தெ.ஆப்பிரிக்க கேப்டன்

பிகாரில் மகா கூட்டணி ஆட்சியில் தலித், முஸ்லீம் துணை முதல்வர்கள்! - தேஜஸ்வி சூசகம்!

சொல்லப் போனால்... பிரதமர் பேச்சும் புலம்பெயர் வாழ்வும்!

வில்லியம்சன் விடைபெற்றார்.. சர்வதேச டி20-ல் ஓய்வு!

SCROLL FOR NEXT