file photo
இந்தியா

ராஜஸ்தான்: சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் சுற்றுலா வேன் மோதியதில் 15 பக்தர்கள் பலி!

டெம்போ டிராவலர் வேன் ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் படுவேகத்தில் மோதி விபத்து

இணையதளச் செய்திப் பிரிவு

ராஜஸ்தானில் சுற்றுலா வேன் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் பைகானெர் அருகே கோலயாத் பகுதியிலிருந்து பாரத் மாலா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டெம்போ டிராவலர் வேன் ஒன்று மடோடா கிராமம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனம் ஒன்றில் படுவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அந்த வேனிலிருந்தவர்களில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு ஓசியான் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்கள் புனித யாத்திரைக்குச் சென்ற பக்தர்கள் என்று அடையாளம் காணப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஜோத்பூரிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக ஜோத்பூர் மாவட்ட ஆட்சியர் ஸ்வேதா சௌஹான் தெரிவித்தார்.

An accident occurred on the Bharat Mala Highway. A tempo-traveller coming from Kolayat, Bikaner rammed into a trailer parked on the road from behind. 15 people were killed

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT