கோப்புப் படம் 
இந்தியா

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில், 3 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

பிஜப்பூரின், தர்லாகுடாவில் அமைந்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் இன்று (நவ. 5) காலை முதல் மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் துணை ராணுவப் படை மற்றும் சத்தீஸ்கர் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் கடுமையான துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில், மாவோயிஸ்டுகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்துடன், கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்கள் மற்றும் அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும், தர்லாகுடா வனப்பகுதியில் தொடர்ந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2,100 மாவோயிஸ்டுகள் சரணடைந்ததுடன், 477 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், வரும் 2026 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்திற்குள் நாட்டில் உள்ள மாவோயிஸ்டுகள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

In Chhattisgarh's Bijapur district, 3 Maoists were shot dead by security forces.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒப்பந்த தூய்மைப் பணியாளா் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!

அய்யா வைகுண்டசுவாமி பிறந்த நாள்: மாா்ச் 4-இல் குமரி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூா் விடுமுறை!

நீதித் துறையை அவமதிக்கும் பாடம்: என்சிஇஆா்டி புத்தகத்துக்குத் தடை! அனைத்துப் பிரதிகளையும் திரும்பப் பெற உச்சநீதிமன்றம் உத்தரவு

மாசிலாமணிபுரத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

செம்மண் கடத்திய மினி லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT