சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து, தயவுசெய்து உதவுங்கள்; பாடகி சின்மயி புகார்!
பாடகி சின்மயி ஹைதராபாத் காவல் துறையிடம் புகாரளித்துள்ளது குறித்து...
சமூக வலைதளங்களில் தனக்கு எதிராக அவதூறான கருத்துக்கள் தெரிவிக்கப்படுவதாக, பிரபல பாடகி சின்மயி ஸ்ரீபதா ஹைதராபாத் காவல் துறை ஆணையரிடம் புகாரளித்துள்ளார்.
சமூக வலைதளப் பக்கங்களில் தனக்கு எதிராகவும், தனது குழந்தைகளுக்கு எதிராகவும் சில தனிநபர்கள் அவதூறு கருத்துகளைத் தெரிவித்து வருவதாக ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனாரிடம் பிரபல பாடகி சின்மயி ஸ்ரீபதா எக்ஸ் தளப் பக்கம் வாயிலாகப் புகாரளித்துள்ளார்.
இதுபற்றி, பாடகி சின்மயி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் கூறியதாவது:
Advertisement
Advertisement
“மதிப்பிற்குரிய சஜ்ஜனார், நாள்தோறும் நடைபெறும் அவதூறு தாக்குதல்கள் என்னை மிகவும் சோர்வடைய வைத்துள்ளன. அவர்களுக்கு என் கருத்து பிடிக்கவில்லை என்றால் அதனை அவர்கள் கண்டுகொள்ளாமல் செல்லலாம்.
இந்த வழக்கு 15 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்தாலும் நான் மகிழ்ச்சியுடன் புகாரளிக்கின்றேன். இந்த ஆண்கள் என் குழந்தைகள் இறக்கவேண்டுமென்று கூறுகின்றனர். தயவுசெய்து உதவுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து, ஹைதராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் விசாரணை மேற்கொள்ள சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, எக்ஸ் தளப் பக்கத்தில் பாடகி சின்மயிக்கு பதிலளித்துள்ள சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள், இந்த விவகாரம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க: பிகார் பேரவைத் தேர்தல்: 64.46% வாக்குகள் பதிவு!
singer Chinmayi has filed a complaint with the Hyderabad Police Commissioner alleging that defamatory comments are being made against her on social media.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.