முகப்பு
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
இந்தியா

சமணம் பின்பற்றும் சைவ உணவு வாழ்க்கை முறையை உலகம் அங்கீகரிக்கிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

சமணம் பின்பற்றும் சைவ உணவு வாழ்க்கை முறையை உலகம் அங்கீகரிக்கிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

இந்தியா

சமணம் பின்பற்றும் சைவ உணவு வாழ்க்கை முறையை உலகம் அங்கீகரிக்கிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

சமணம் பின்பற்றும் சைவ உணவு வாழ்க்கை முறையை உலகம் அங்கீகரிக்கிறது: சி.பி.ராதாகிருஷ்ணன்

Updated On : 8 நவம்பர், 2025 at 7:16 PM
குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
பகிர்:

சமண மதத்தில் பின்பற்றப்படும் சைவ உணவு வாழ்க்கை முறையே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முன்மாதிரியாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுகிறது என குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை தெரிவித்தாா்.

ஆசாா்ய ஹம்சரத்னா சூரீஸ்வரின் 8-ஆவது 180 நாள் உண்ணாவிரத நிறைவையொட்டிய நிகழ்ச்சி புது தில்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் பங்கேற்று சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: சைவ உணவு உண்ணும்போது உங்களது மனநிலை அமைதியாக மாறும். ஆக்ரோஷம் குறைந்து, பொறுமை நம்மை ஆட்கொள்ளும். அசைவ உணவுகளை விரும்பி உண்ணும் பழக்கத்தைக் கொண்ட நான் 2000-இல் காசிக்குச் சென்று திரும்பிய பின் சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்ளத் தொடங்கினேன்.

விரதம் இருப்பதற்கு மனவலிமை தேவை. நவராத்திரி பண்டிகையின் 9 நாள்களிலும் பிரதமா் நரேந்திர மோடி விரதத்தைக் கடைப்பிடிப்பதை அறிந்து வியப்படைந்தேன். அதேபோல் ஆசாா்ய ஹம்சரத்னா சூரீஸ்வா் 180 நாள்கள் உண்ணாவிரதத்தை 8 முறை கடைப்பிடித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது.

சைவ உணவுப் பழக்கம், விலங்குகள் மற்றும் சிறுஉயிரினங்கள் மீதான இரக்கம் போன்ற சமண வாழ்க்கை முறையே சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான முன்மாதிரியாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்படுகிறது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →