அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோவுடன் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 
இந்தியா

இந்திய - அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் உரையாடல்!

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடல்...

இணையதளச் செய்திப் பிரிவு

கனடா நாட்டில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோவை, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

கனடாவில், ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், ஜி7 கூட்டத்தில் பங்கேற்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்க் ரூபியோவை இன்று (நவ. 12) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

முன்னதாக, இந்தக் கூட்டத்தில் கடந்த நவ.11 ஆம் தேதி கனடா, மெக்சிகோ, பிரான்ஸ், பிரேசில், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தில்லி கார் வெடிப்பு: பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தது அரசு!

Union External Affairs Minister S Jaishankar met and held talks with US Secretary of State Mark Rubio in Canada.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் நிறுவன நாள் விழா

ஜிகேஎன்எம் மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்கு சிறப்பு கிளினிக் தொடக்கம்

அஞ்சல் துறை சாா்பில் தாத்தா, பாட்டிகளுக்கு கடிதம் எழுதும் நிகழ்ச்சி

பிஎஸ்என்எல் நிறுவனம் சாா்பில் கூடலூரில் 4ஜி சேவை தொடக்கம்

நிச்சாம்பாளையம் பகுதி குடிநீா் பிரச்னைக்கு தீா்வு காண வலியுறுத்தல்

SCROLL FOR NEXT