இந்திய - அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் உரையாடல்!
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உரையாடல்..
கனடா நாட்டில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை, மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
கனடாவில், ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், இந்தியா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், ஜி7 கூட்டத்தில் பங்கேற்றுள்ள மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை இன்று (நவ. 12) நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
Advertisement
Advertisement
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
முன்னதாக, இந்தக் கூட்டத்தில் கடந்த நவ.11 ஆம் தேதி கனடா, மெக்சிகோ, பிரான்ஸ், பிரேசில், தென்னாப்பிரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தில்லி கார் வெடிப்பு: பயங்கரவாத தாக்குதலாக அறிவித்தது அரசு!
Union External Affairs Minister S Jaishankar met and held talks with US Secretary of State Mark Rubio in Canada.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.